அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா செடியை பயிரிட்ட சந்தேக நபர் அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிகம பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா செடியை பயிரிடப்பட்டு வந்த நிலையில் நேற்று(26) மாலை பொலிஸாரின் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
உஹன பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் இதன் போது சுமார் 6 1/2 அடி உயரமான கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதுடன், கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உஹன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.