Homeஉலகம்5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்.

5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்.

Published on

ஹாங்காங்கில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டினருக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம் முழுவதும் பரவி ஒட்டுமொத்த மனித செயல்பாட்டுகளையும் முடக்கியது.
பெரும்பாலான நாடுகள் இன்று வரை ஊரடங்கு நடவடிக்கையால் பொருளாதாரம் சீர்குலைந்து சிக்கலில் தவித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உருக்குலைந்த சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், வெளிநாட்டினருக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

அத்துடன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், ஹாங்காங் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினர் கட்டாயமாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை கூட தளர்த்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த சலுகைகள் சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாறு நாட்டிற்குள் வரும் சுற்றுலா பயணிகள் நிச்சயமாக இரண்டு நாட்களாவது ஹாங்காங்கில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....