Homeஇலங்கை4 மாகாணங்களில் அரச வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

4 மாகாணங்களில் அரச வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Published on

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டுப் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நான்கு மாகாணங்களில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று (13) காலை 8.00 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அதன் ஆரம்ப கட்டமாக மேல், தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

வடமேல், வடமத்திய, வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (14ஆம் திகதி) காலை 8:00 மணி முதல் ஒருநாள் வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக GMOA செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார். எதிர்வரும் 15ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் பதிலைக் கண்காணித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் புதன்கிழமை (15) அறிவிக்கப்படும் என்றும் GMOA செயலாளர் மேலும் தெரிவித்தார்.

குழந்தைகள், மகப்பேறு, புற்றுநோய், முப்படை மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சை பிரிவுகள் மற்றும் தேசிய மனநல சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...