Homeஇலங்கை27 அடி உயரமான நடராஜர் சிலை கிளிநொச்சியில் திறந்துவைப்பு.

27 அடி உயரமான நடராஜர் சிலை கிளிநொச்சியில் திறந்துவைப்பு.

Published on

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்றைய தினம் (12) முற்பகல் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் கீழ் உள்ள ஆனையிறவு பகுதியில் சுமார் 27 அடி உயரமான நடராஜர் சிலை ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள அதிக உயரங்களை கொண்ட சிவன் சிலை, முருகன் சிலை, ஆஞ்சநேயர் சிலைகளுடன் கிளிநொச்சி நடராஜர் சிலையும் இணைந்து கொண்டமை வரலாற்று சிறப்பம்சமாகும்.

குறித்த நிகழ்வில் இந்து மத சிவாச்சாரியார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா, பக்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட பின்னர், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பிரயாணிகளும் நடராஜர் சிலையை பார்வையிட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....