இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. 163 ரன்களை துரத்திய இலங்கை அணி 20 ஓவர்களில் 160 ரன்களை எட்டியபோது ஆட்டத்தின் கடைசி பந்தில் சுருண்டது. இந்திய அணியில் அறிமுகமான சிவம் மாவி பந்தில் அபாரமாக ஆட்டமிழந்தார். வேகப்பந்து வீச்சாளர் தனது நான்கு ஓவர்கள் ஒதுக்கீட்டில் 22 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். முன்னதாக மாலையில், தீபக் ஹூடா மற்றும் அக்சர் படேல் ஜோடி 35 பந்துகளில் 68 ரன்கள் குவித்து 20 ஓவர்களில் 162/5 என்று இந்தியாவை வழிநடத்தியது. இருவரும் ஆட்டமிழக்காமல் திரும்பினர், ஹூடா 23 பந்துகளில் 41 ரன்களும், அக்சர் 20 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். இந்தியா ஒரு அட்டகாசமான தொடக்கத்தைப் பெற்றிருந்தது, ஆனால் பவர்பிளேயில் ஷுப்மான் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை இழந்த பிறகு, புரவலன்கள் விரைவில் தங்களைத் தாங்களே பின்னுக்குத் தள்ளினார்கள். சஞ்சு சாம்சனும் மலிவாக வீழ்ந்தார். ஹர்திக் பாண்டியாவும், இஷான் கிஷானும் நடுவில் முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இஷான் 37 ரன்களில் ஆட்டமிழந்தார், பாண்டியா 29 ரன்களில் கேட்ச் ஆனார்.
இறுதிக் கட்டத்தில் சிறப்பான ஜோடியை அமைத்த தீபக் ஹூடா – அக்சர் பட்டேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியில் ஹூடா 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார். அக்சர் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரிகளை தெறிக்கவிட்டார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷன் கிஷன் 37 ரன்னும், தீபக் ஹூடா 41 ரன்னும், அக்சர் பட்டேல் 31 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணியில் ஹசரங்கா, தீக்சனா, டி சில்வா, கருணாரத்னே, மதுஷான்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 163 ரன்கள் கொண்ட வெற்றி துரத்திய இலங்கை அணிக்கு நல்ல தொடக்க கிடைக்கவில்லை. தொடக்க வீரர் பதும் நிஸ்ஸங்க ஷிவம் மாவி வீசிய 1.2 வது பந்தில் போல்ட்-அவுட் ஆகி ஒரு ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களில் தனஞ்சய டி சில்வா (8), சரித் அசலங்கா (12), பானுக ராஜபக்ச (10) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனிடையே நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் 28 ரன்னில் அவுட் ஆனார்.
இதன்பிறகு களத்தில் இருந்த கேப்டன் தசுன் ஷனக 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு இந்திய ரசிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார். ஆனால், அவரின் விக்கெட்டை வீழ்த்தினார் இந்தியாவின் வேகப் புயல் உம்ரான் மாலிக். இந்த தருணத்தில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கையின் வெற்றிக்கு 12 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது.
இந்தியாவின் ஹர்ஷல் படேல் வீசிய 18.4 வது பந்தில் கருணாரத்னே ஒரு சிக்ஸரை பறக்க விட, ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இப்போது இலங்கையின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்றானது. கடைசி ஓவரை அக்சர் படேல் வீசினார். முதல் பந்தில் ஒயிடு, மீண்டும் வீசப்பட்ட அந்த பந்தில் ஒரு ரன், 2வது பந்தில் ரன் இல்லை என ஸ்மூத்தாக சென்றது. ஆனால், அந்த நேரத்தில் தான் அக்சர் வீசிய 3வது பந்தில் கருணாரத்னே மீண்டும் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார்.
அக்சர் படேல் அதிர்ந்தாரோ இல்லையோ, ஆட்டத்தை பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. அதனால் எப்போது தான் அந்த சாமிக்க கருணாரத்னே அவுட் ஆகுவார் என்று ரசிகர்கள் பிராத்திக்க தொடங்கினர். இலங்கையின் வெற்றிக்கு 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4வது பந்தில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. 5வது பந்தில் கருணாரத்னேவுடன் மறுமுனையில் இருந்த கசுன் ராஜித ரன்-அவுட் ஆனார். எனினும், கடைசி பந்தை எதிர்கொள்ள ஸ்ட்ரைக் என்டில் கருணாரத்னே இருந்தார். ஏற்கனவே 2 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்ட நிலையில், இப்போது மீண்டும் அடிப்பாரா? அல்லது பவுண்டரி அடிப்பாரா? அல்லது 2 ரன்கள் ஓடுவாரா? என பல கேள்விகள் எழுந்தன.
இந்த அழுத்தம் நிறைந்த நேரத்தில் பந்தை விரட்டிய கருணாரத்னே 2 ரன்கள் ஓட முயன்றார். அப்போது அவருடன் ஜோடியில் இருந்த டில்ஷான் மதுஷங்க ரன்-அவுட் செய்யப்பட்டார். இதனால், வெற்றி முகம் இந்தியா பக்கம் திரும்பியது. இலங்கை அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியாவுக்கு திரில் வெற்றி கிடைத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு பேட்டிங்கை விட பந்துவீச்சு தான் அதிகம் கை கொடுத்தது எனலாம். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் சிவம் மாவி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதேபோல், ஹர்ஷல் படேல் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பேட்டிங்கில் அதிரடி காட்டிய தீபக் ஹூடா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.