Homeஇந்தியா15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 33 வயது நபர் - கொடூரமான...

15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 33 வயது நபர் – கொடூரமான சம்பவம்

Published on

அரியானா மாநிலம் குருகிராமில் ராஜேந்திர நகரில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபயணம் மேற்கொண்டபோது 15 வயது சிறுமிக்கு முகமது ஷதாப் (வயது 33) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முகமது ஷதாப் தனது பெயரை அர்மென் என்று மாற்றி கூறி அந்த சிறுமியிடன் பழகியுள்ளார். நாளடைவில் இருவரும் நட்பாக பழகியுள்ளனர். இதனிடையே, திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த 26-ம் தேதி முகமது ஷதாப் சிறுமியை போபால் நகருக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு சிறுமியை முகமது பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 28-ம் தேதி போபாலில் முகமதுவை போலீசார் கைது செய்தனர். போபால் ரெயில் நிலையத்தில் வைத்து முகமதுவை கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் முகமது ஷதாப் தன் பெயரை அர்மென் என மாற்றி சிறுமியிடம் பழகி பின்னர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட முகமது சிறையில் அடைக்கப்பட்டார்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...