அரச ஊழியர்களுக்கு சுமார் 10000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இச்சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்துள்ளார். பின்னர் இது குறித்து அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென தெரிவிக்கப்படுகின்றது.