வெந்தயம் கிட்டத்தட்ட அனைவரின் வீட்டு சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருள்.
இது ஒரு அருமையான உணவுப் பொருள் மட்டுமல்ல, பல நோய்களுக்கு அருமருந்தாகவும் விளங்குகிறது.
ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது இந்த வெந்தயத்தில். பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது.
குறிப்பாக இது சக்கரை வியாதியை கட்டுப்படுத்த உதவுகின்றது. தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என பார்ப்போம்.
வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். . பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் Teaதூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.
முதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும். ஊற வைக்காமல் வெந்தய்த்தை வெறுமனே சாப்பிடுதல் உடலுக்கு பாதிப்பைத் தரும்.
வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள்.