செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமூன்று பெண்களை கழுத்து நெரித்து கொலை செய்த நபர் கைது!

மூன்று பெண்களை கழுத்து நெரித்து கொலை செய்த நபர் கைது!

Published on

spot_img
spot_img

மூன்று பெண்களை கழுத்தை நெரித்து கொன்று சொத்துக்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் எல்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இத்தேபானையில் பெண்ணொருவர் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டு உடமைகள் கொள்ளையிடப்பட்டதையடுத்து எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

யகிரல பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு எல்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கைத்தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபருக்கு எதிராக மத்துகம, களுத்துறை மற்றும் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest articles

வாகன விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன்…..

நேற்று (19) இரவு ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை...

கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் : நடந்தது என்ன ?

கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இந்த காலப்பகுதியில் சுமார் 300இற்கும் மேற்பட்ட விசேட...

மொபைல் சண்டையால் கொலை செய்யப்பட்ட நபர்…….

நேற்று (19) இரவு வாழைச்சேனை பகுதியில் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் 43...

அமெரிக்க நீதிமன்றின் பாதுகாப்பு மீறப்பட்டது……

ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல் தனக்கு எதிராக தகவல்களை தெரிவிக்காமல் இருப்பதற்காக டொனால்ட் டிரம்ப் அவருக்கு பணம் வழங்கினாரா...

More like this

வாகன விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன்…..

நேற்று (19) இரவு ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை...

கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் : நடந்தது என்ன ?

கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இந்த காலப்பகுதியில் சுமார் 300இற்கும் மேற்பட்ட விசேட...

மொபைல் சண்டையால் கொலை செய்யப்பட்ட நபர்…….

நேற்று (19) இரவு வாழைச்சேனை பகுதியில் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் 43...