மலேசியாவில் உயர்நிலைப் பள்ளி ஒன்று தீயில் சேதமடைந்தது. ஜொகூரின் பத்து பஹாட் (Batu Pahat) மாவட்டத்தில் உள்ள பாரிட் ராஜா (Parit Raja) நகரில் அச்சம்பவம் நேர்ந்தது.
SMK Tun Ismail உயர்நிலைப் பள்ளியின் 2 வகுப்பறைகளும் தலைமையாசிரியர் அலுவலகமும் சேதமடைந்ததாக ஆயர் ஹித்தாம் (Ayer Hitam) தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.சம்பவம் (31 மே) இரவு ஒன்பதே முக்கால் மணியளவில் நேர்ந்தது.
16 தீயணைப்பாளர்களும் 2 தீயணைப்பு வண்டிகளும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக The Star தெரிவித்தது.தீயில் பள்ளியின் இரண்டாம் மாடி பாதிக்கப்பட்டது.
இரவு 10:30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.அது ஏற்படுத்திய சேதத்தை மதிப்பிடுவதோடு தீ மூண்டதற்கான காரணத்தையும் ஆராய்வதாகத் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.