செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாபிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

Published on

spot_img
spot_img

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. 1984- ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகம் ஆன மயில்சாமி . சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2000-ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. பிரபல தனியார் டிவியில் காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை மயில்சாமி தொகுத்து வழங்கினார். அப்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் முன்பே அவரின் உயிரின் பிரிந்துவிட்டது. அவரின் இறப்பை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர். மயில்சாமியின் திடீர் மறைவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் மயில் சாமியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு அவருடனான நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.

Latest articles

கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுக்க இருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர்…….

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் வெற்றியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது , அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள...

சிவனொளிபாத மலையிலிருந்து கீழே குதித்த இளைஞனை தேடும் பொலிஸார்……

சிவனொளிபாத மலையை தரிசிக்க சென்ற இளைஞர் ஒருவர் இரத்தினபுரி வீதி சிவனொளிபாத மலை முற்றத்தில் உள்ள பாதுகாப்பு வேலியில்...

வாகன விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன்…..

நேற்று (19) இரவு ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை...

கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் : நடந்தது என்ன ?

கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இந்த காலப்பகுதியில் சுமார் 300இற்கும் மேற்பட்ட விசேட...

More like this

கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுக்க இருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர்…….

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் வெற்றியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது , அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள...

சிவனொளிபாத மலையிலிருந்து கீழே குதித்த இளைஞனை தேடும் பொலிஸார்……

சிவனொளிபாத மலையை தரிசிக்க சென்ற இளைஞர் ஒருவர் இரத்தினபுரி வீதி சிவனொளிபாத மலை முற்றத்தில் உள்ள பாதுகாப்பு வேலியில்...

வாகன விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன்…..

நேற்று (19) இரவு ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை...