பிரபல பாடசாலையில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியுள்ள இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இந்த மோதல் சம்பவம் கடுகஸ்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,
தற்போது இடம்பெற்று வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களே மேற்படி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தின் போது மாணவர்கள் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தி மோதிக்கொண்டனர்.
தற்போது பரீட்சை இடம்பெற்று வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. பரீட்சைகள் முடிந்த பின் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.