செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமா"தளபதி 66" திரைப்படம் தொடர்பிலான புதிய Update!

“தளபதி 66” திரைப்படம் தொடர்பிலான புதிய Update!

Published on

spot_img
spot_img

“பீஸ்ட்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “தோழா” உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. தமன் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான “பூவே உனக்காக”, “காதலுக்கு மரியாதை” போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில், 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் ஹைதராபாத் சென்ற விஜய் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தில் நடிகர் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை ஜெயசுதா ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்கள் குறித்த விவரங்களை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் ஷாம், யோகி பாபு, நடிகை சங்கீதா மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் யோகி பாபு விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

மொபைல் சண்டையால் கொலை செய்யப்பட்ட நபர்…….

நேற்று (19) இரவு வாழைச்சேனை பகுதியில் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் 43...

அமெரிக்க நீதிமன்றின் பாதுகாப்பு மீறப்பட்டது……

ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல் தனக்கு எதிராக தகவல்களை தெரிவிக்காமல் இருப்பதற்காக டொனால்ட் டிரம்ப் அவருக்கு பணம் வழங்கினாரா...

கொழும்பு வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்த தீர்மானம்……

சர்வோதயா சமூக மேம்பாட்டு சமூக நலத் திட்டத்தின் ஸ்தாபகர் மறைந்த கலாநிதி ஏ.டி .ஆரியரத்னவின் பூதவுடலுக்கு இன்று (20)...

வெங்காய இறக்குமதிக்கான இறுதித் தீர்மானம்……

இன்று (20) ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வர்த்தக அமைச்சர் நளின்...

More like this

மொபைல் சண்டையால் கொலை செய்யப்பட்ட நபர்…….

நேற்று (19) இரவு வாழைச்சேனை பகுதியில் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் 43...

அமெரிக்க நீதிமன்றின் பாதுகாப்பு மீறப்பட்டது……

ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல் தனக்கு எதிராக தகவல்களை தெரிவிக்காமல் இருப்பதற்காக டொனால்ட் டிரம்ப் அவருக்கு பணம் வழங்கினாரா...

கொழும்பு வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்த தீர்மானம்……

சர்வோதயா சமூக மேம்பாட்டு சமூக நலத் திட்டத்தின் ஸ்தாபகர் மறைந்த கலாநிதி ஏ.டி .ஆரியரத்னவின் பூதவுடலுக்கு இன்று (20)...