சீனாவில் இருந்து தென்கொரியா மற்றும் இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது மகள்களில் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த 36 வயதான தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தாய் மற்றும் ஒரு மகள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூவருக்கும் தீவிர அறிகுறிகள் இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெண்ணின் சகோதரர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அந்த பெண்ணின் சகோதரனும் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.