செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா விளையாடி வருகின்றன, 3 விக்கெட் இழப்பிற்கு...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடி வருகின்றன, 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் ஆஸ்திரேலியா.

Published on

spot_img
spot_img

லண்டன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் குவாஜா களமிறங்கினர். 10 பந்துகளை சந்தித்த குவாஜா ரன் எதுவும் எடுக்காமல் (0) சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த மார்னஸ் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டேவிட் வார்னர் 60 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் லபுஷேன் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய வீரர்களின் பந்து வீச்சை இரு வீரர்களும் சிறப்பாக எதிர்கொண்டனர். டிராவிஸ் ஹெட் அதிரடியாக சதம் விளாசினார். ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாசினார். இறுதியில் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவரில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது.

டிராவிஸ் ஹெட் 156 பந்துகளில் 156 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Latest articles

வெங்காய இறக்குமதிக்கான இறுதித் தீர்மானம்……

இன்று (20) ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வர்த்தக அமைச்சர் நளின்...

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்…..

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி...

முதலைக்கு இரையாகிய முதியவர் வாழைச் சேனையில் துயரம் …….

முதலை கடித்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

மரக்கறிகளின் விலை திடீர் மாற்றம் ……

பேலியகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்பட்டன. அதன்படி, ஒரு கிலோ தேசிக்காய் 1,000...

More like this

வெங்காய இறக்குமதிக்கான இறுதித் தீர்மானம்……

இன்று (20) ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வர்த்தக அமைச்சர் நளின்...

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்…..

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி...

முதலைக்கு இரையாகிய முதியவர் வாழைச் சேனையில் துயரம் …….

முதலை கடித்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...