செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇன்று முதல் அமுலுக்கு வரும் மாதாந்த சம்பளத்திற்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும்.

இன்று முதல் அமுலுக்கு வரும் மாதாந்த சம்பளத்திற்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும்.

Published on

spot_img
spot_img

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் உட்பட பல தீர்மானங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.

அதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் மாதாந்த சம்பளத்திற்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும்.

மாதாந்த சம்பளம் 150,000 ரூபாவாக இருந்தால் மாதாந்த வரியாக 3500 ரூபா அறவிடப்படும். மாதச் சம்பளம் 02 லட்சம் ரூபாய் என்றால், மாத வரித் தொகை 10,500ரூபாவாகும். 250,000 ரூபா மாதாந்த சம்பளம் பெறும் நபர் 21,000 ரூபாவையும், 300,000 ரூபா சம்பளம் பெறுபவர் 35,000 ரூபாவையும் வரியாக செலுத்த வேண்டும்.

350,000 மாத சம்பளம் பெறுபவர் 52,500 ரூபாவையும், 04 லட்சம் ரூபா சம்பளம் பெறுபவர் 70,500 ரூபாவையும், 05 இலட்சம் ரூபா சம்பளம் பெறுபவர் 106,500 ரூபாவையும் வரியாக செலுத்த வேண்டும்.

மேலும், 750,000 ரூபா சம்பளம் பெறுபவர் மாதாந்தம் 196,500 ரூபாவை வரியாக செலுத்த வேண்டும், பத்து இலட்சம் ரூபா சம்பளம் பெறுபவரிடம் இருந்து பெறப்படும் வரித் தொகை 286,500 ரூபாவாகும்.
எவ்வாறாயினும், இன்று முதல் அமுலுக்கு வரும் தனிநபர் வருமான வரியானது ஒரு லட்சம் ரூபா வரை சம்பளம் பெறுபவர்களுக்கு அறவிடப்படாது எனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த வருமான வரியில் சில திருத்தங்கள் இருக்கும் எனவும் அது தரமான, பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி, விவசாய செயலாக்கம், கல்வி, சுற்றுலா, கட்டுமானம் மற்றும் சுகாதார சேவைகள் துறைகளுக்கு 30 சதவீதமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

Latest articles

எந்த நேரத்திலும் இலங்கையின் முன்னேற்றத்திற்காக ஈரான் துணை நிற்கும்……..

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், விழாவில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி, பாரிய திட்டங்களில் பங்காளித்துவம்...

இலங்கையை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி ……

இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் தூதுக்குழுவினருக்கு மத்தளை விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது....

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கணக்காளருக்கு நேர்ந்த கதி ……

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை...

வவுனியா பொலிஸார் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு ……

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து நேற்றைய தினம்...

More like this

எந்த நேரத்திலும் இலங்கையின் முன்னேற்றத்திற்காக ஈரான் துணை நிற்கும்……..

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், விழாவில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி, பாரிய திட்டங்களில் பங்காளித்துவம்...

இலங்கையை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி ……

இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் தூதுக்குழுவினருக்கு மத்தளை விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது....

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கணக்காளருக்கு நேர்ந்த கதி ……

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை...