செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்அமெரிக்காவில் பிறந்த 3 நாட்களில் நகர்ந்த குழந்தை

அமெரிக்காவில் பிறந்த 3 நாட்களில் நகர்ந்த குழந்தை

Published on

spot_img
spot_img

பிறந்து 3 நாட்களிலே குழந்தை ஒன்று தலையை தூக்கிய நிலையில் நகர்கின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெனிசில்வேனியா சேர்ந்தவர் சமந்தா எலிசபெத். இவருக்கு பிப்ரவரி மாதம் நைலா என்ற குழந்தை பிறந்துள்ளது.

இக்குழந்தை பிறந்த மூன்று நாட்களில் குப்புறப் படுத்து தலையை தூக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. இதனை சற்றும் எதிர்பாராத சமந்தா தனது போனில் அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.

இது குறித்து சமந்தா கூறுகையில்,

“முதல் தடவை அவள் தனது இடத்திலிருந்து நகர்வதை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். என் வாழ்க்கையில், பிறந்த குழந்தை ஒன்று இவ்வளவு விரைவாக நகர்ந்ததை நான் பார்த்ததில்லை.

என் குழந்தை நகர்ந்தபோது அருகில் எனது அம்மா மட்டுமே இருந்தார். நான் இந்த வீடியோவை எடுக்காமல் இருந்திருந்தால் என் கணவர் உட்பட யாரும் இதனை நம்பி இருக்க மாட்டார்கள்” என்றார்.

அதேவேளை குழந்தைகள் பிறந்து  பெரும்பாலும் 8 -9 மாதங்களில் தான் நகரும். இந்த நிலையில் மூன்று நாட்களில் நைலா நகர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest articles

பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை ……

இலங்கையின் பிரபல நடிகையும் மொடலிங்குமான பியூமி ஹன்சமாலியின் சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடிகையும் மொடலிங்குமான பியூமி ஹன்சமாலியின்...

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த 21 இலங்கை பணியாளர்கள் மீட்பு …… 

ஓமான் வளைகுடா கடலில் கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலின் காணப்பட்ட 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர...

முல்லைத்தீவு மாவட்ட மீனவசங்க பிரதிநிதிகளுடன் கடற்றொழில் அமைச்சர் முக்கிய கலந்துரையாடல் …….

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா நேற்றைய...

குழந்தை கத்தி முனையில் மிரட்டல் வவுனியாவில் பாரிய கொள்ளை …..

வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தயாரை மிரட்டி நகைகள்...

More like this

பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை ……

இலங்கையின் பிரபல நடிகையும் மொடலிங்குமான பியூமி ஹன்சமாலியின் சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடிகையும் மொடலிங்குமான பியூமி ஹன்சமாலியின்...

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த 21 இலங்கை பணியாளர்கள் மீட்பு …… 

ஓமான் வளைகுடா கடலில் கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலின் காணப்பட்ட 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர...

முல்லைத்தீவு மாவட்ட மீனவசங்க பிரதிநிதிகளுடன் கடற்றொழில் அமைச்சர் முக்கிய கலந்துரையாடல் …….

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா நேற்றைய...