Homeஇலங்கைவாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட பெண் உயிரிழப்பு

வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட பெண் உயிரிழப்பு

Published on

வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவர் இபலோகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய பெண் என கல்நேவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்நேவ, உஸ்கல ஹல்மில்லய பிரதேசத்தில் வசித்து வந்த உதேனி ரசிகா ஏகநாயக்க என்ற 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி பிற்பகல் கல்நேவ பிரதேச செயலகத்திற்கு அருகில் தம்புத்தேகமவில் இருந்து பலலுவெவ நோக்கிச் செல்லும் ‘குயின்ஸ் வீதியில்’ மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இவர் மரக்கட்டைகளை வெட்டும் இயந்திரம் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை முந்திச் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளார்.

இதன்போது உழவு இயந்திரத்தின் பின் சக்கரம் அவரது உடலில் ஏறியதில் வீதியின் இடது பக்கமாக விழுந்து பலத்த காயங்களுடன் கல்னாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் அவர் குடிபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான மோட்டார் சைக்கிள் சாரதி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Latest articles

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

More like this

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...