Homeஇலங்கைவவுனியா வாள்வெட்டு தாக்குதல் குறித்து வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்

வவுனியா வாள்வெட்டு தாக்குதல் குறித்து வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்

Published on

வவுனியாவில் வாள்வெட்டுக்கு இலக்காகி 21 வயது பாத்திமாவும் அவரது கணவர் சுகந்தனும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்த நிலையில் உயிரிழந்த சுகந்தன் தொடர்பில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த சுகந்தன் கட்டைப்பஞ்சாயத்து நடத்தி வந்தவர் என கூறப்படுவதுடன் அது தொடபிலான காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு, வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் ஈநடத்தியதுடன், வீட்டுக்கும் பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றது.

இந்த சம்பவத்தில் சுகந்தனின் மனைவி பாத்திமா சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் , வாள்வெட்டு தாக்குதலுக்குள்ளான சுகந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை (26) உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் சுகந்தன் கட்டைப்பஞ்சாயத்து நடத்தி வந்ததாக கூறப்படும் நிலையில் நபர் ஒருவரை கட்டிவைத்து தாக்கும் காணொளியும் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...