வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களுக்கான ஒன்று கூடல் நேற்று (05.12.2023) மதியம் இடம்பெற்றது. இதன்போது உயர்தர மாணவர்கள் சொகுசு கார்கள் மற்றும் அதியுயர் வேகம் கொண்ட மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுடன் பாடசாலைக்கு வருகை தந்ததுடன், பாடசாலை முன்பாக அவற்றை செலுத்தி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தினர்.
இதன்போது பாடசாலையில் ஏனைய வகுப்பு மாணவர்களை ஏற்ற வந்த பெற்றோர் ஒருவருடன் விபத்து ஏற்பட்டதையடுத்து, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அப் பகுதியில் இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அப் பகுதியில் பொலிசார் வருகை தந்து நிலமையை கட்டுப்படுத்தினர்.