Homeஇலங்கைவவுனியாவில் 95 ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு மாம்பழம்!

வவுனியாவில் 95 ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு மாம்பழம்!

Published on

வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நடைபெற்ற ஏலத்தின் போது மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போனது.

வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் இந்து ஆலயத்தில் நேற்று முன்தினம் (13ஆம் திகதி) விசேட பூசை மற்றும் நிகழ்ச்சியின் பின்னர் பூஜை பானைகள் மற்றும் பழங்கள் ஏலத்தில் விடப்பட்டதுடன், மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த மாம்பழத்தை லண்டனை சேர்ந்த தம்பதியினர் வாங்கிச்சென்றதுடன், பிரசாதம் வழங்கும் பானைகள், பழங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ஏலம் விடப்பட்டதோடு, இவ்வளவு தொகைக்கு மாம்பழம் ஏலம் போனது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏலத்தில் பெறப்படும் பணம் ஆலயத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் ஆலயத்தின் தலைவர் தெரிவித்தார்.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...