வவுனியா – பாலமோட்டை கோவில் குஞ்சுகுளம் பகுதியில் இளைஞன் ஒருவர் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவில் குஞ்சுகுளம் பகுதியில் தோட்டம் செய்து வரும் ஓமந்தை வேப்பங்குளத்தை சேர்ந்த 21 வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.குறித்த இளைஞன் தோட்டம் செய்துவரும் பகுதியிலிருந்து 100மீற்றர் தொலைவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தின் கழுத்துப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்தின் அடையாளம் காணப்படுவதுடன், கட்டுத்துப்பாக்கி ஒன்றும் குறித்த இளைஞரது மோட்டார் சைக்கிளும் அருகில் காணப்படுகிறது.
குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது வேறு பகுதியில் யாரேனும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு குறித்த பகுதியில் சடலத்தை வைத்துவிட்டு தற்கொலை போல் திசை திருப்புவதற்கு செய்துள்ளனரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது.