Homeஇலங்கைவவுனியாவில் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு.

வவுனியாவில் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு.

Published on

வவுனியா – மணியர்குளம் குளப்பகுதியில்   காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம்   காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா – பூவரசங்குளம், மணியர்குளம் குளப்பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம்  காணப்படுவதாக  பூவரசங்குளம் காவல்துறையினருக்கு நேற்றிரவு (09) வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன்,  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் யசோதரன் என்ற 28 வயது  குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.குறித்த இளைஞனின் சடலத்தில் காயங்கள் காணப்பட்டுள்ள நிலையில், இது மதுபோதையில் இடம்பெற்ற  கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியட்டுள்ள காவல்துறையினா்   சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  ஐந்து  பேரைக் கைதுசெய்துள்ளனர்.

அதேவேளை, குறித்த சடலத்தை பதில் நீதிபதி த.திருவருள்  மற்றும், சட்ட வைத்திய அதிகாரி  ஆகியோா்  சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளனா்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...