Homeஇந்தியாராணுவ அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு கேட்டு மோசடி; பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நூதன...

ராணுவ அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு கேட்டு மோசடி; பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நூதன முறையில் திருட்டு.

Published on

சென்னை புளியந்தோப்பு அடுத்த சூளை ஆவடி சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் வளர்மதி (வயது 42). இவரது கணவர் ரமேஷ். பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். வளர்மதி தனது மற்றொரு வீட்டை வாடகைக்கு விடுவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர், தனது பெயர் பவானி சிங் என்றும், ராஜஸ்தானில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், தற்போது சென்னைக்கு மாறுதலாகி உள்ளதால் உங்கள் வீடு வாடகைக்கு தேவை எனவும் பேசி உள்ளார். மேலும் அந்த வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு செல்போன் பணபரிமாற்ற செயலி மூலம் அவரது தொலைபேசி எண்ணிற்கு ரூ.1 மட்டும் அனுப்பும்படி வளர்மதியை கேட்டுள்ளார். பதிலுக்கு பவானி சிங் ரூ.2 அனுப்பிவிட்டு வளர்மதியின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். மோசடி நபர் யார்? ஆனால் இதை நம்பி விவரங்களை தர மறுத்த வளர்மதிக்கு பவானி சிங் தன்னுடைய ஆதார் உள்ளிட்ட அடையாள விவரங்களை அனுப்பி வைத்ததை தொடர்ந்து, அதை உண்மை என நம்பிய வளர்மதி தனது வங்கி விவரங்களை கொடுத்துள்ளார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் வளர்மதியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் எடுக்கப்பட்டதாக வளர்மதிக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி பவானி சிங்கை தொடர்பு கொள்ள முயற்சித்த போது செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து வளர்மதி பேசின் பிரிட்ஜ் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது குறித்து வழக்குப்பதி செய்து போனில் பேசி மோசடி செய்த மர்ம நபர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...