Homeஇலங்கையாழ். நல்லூர் திருவிழாவிற்கு சென்று கொழும்பு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

யாழ். நல்லூர் திருவிழாவிற்கு சென்று கொழும்பு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Published on

கொழும்பு வெள்ளவத்தையில் அதிகாலை நேரத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரைத் தாக்கி அவரின் பணப்பையைத் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் நேற்று அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அப் பெண் யாழ் நல்லூர் திருவிழாவிற்கு சென்று கொழும்பு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது அப் பெண் உதவி கேட்டு அலறும் சத்தம் பலரின் காதுகளுக்கு கேட்ட போதிலும் உதவி செய்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை என்றும் இவ்வாறான சம்பவங்கள் அவ் இடங்களில் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் தெரிய வருகின்றது.

ஆகவே வெளிநாடுகளில் இருந்தும் வெளிப்பிரதேசங்களில் இருந்தும் வருகை தருவோர் பாதுகாப்பான முன் ஆயத்தங்களை செய்துக்கொள்ளுமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாலையில் வரும் பயணிகளை குறிவைத்தே இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் ஆகவே பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் தங்கள் பயணங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...