யாழ்ப்பாணம்- ஆனைக்கோட்டை பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் வியாழக்கிழமை (27) இரவு ஏழு மாதா சொரூபங்கள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைக்கோட்டை சந்தியில் ஒரு சொரூபமும், ஆனைக்கோட்டை சந்திக்கு அருகாமையில் ஒரு சொரூபமும், ஆனைக்கோட்டை கராஜ்ஜடியில் ஒரு சொரூபமும், அடைக்லமாதா தேவாலயத்தை சுற்றி 3 சொரூபங்களும் மற்று ஆனைக்கோட்டை குடிமனைகளுக்கு மத்தியில் உள்ள ஒரு சொரூபமும் உடைக்கப்பட்டுள்ளன.
இதில், சில இடங்களில் சொரூபங்கள் உடைத்து செல்லப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாக வைத்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசமிகளின் செயலால் அங்குள்ள மக்கள் மிகவும் வேதனையடுத்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.