யாழ்ப்பாணம் மனிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கீரிமலை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு கல்லூண்டாய் பகுதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் சைக்கிளில் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அராலி தெற்கு பகுதியை சேர்ந்த காரின் சாரதி இன்றைய தினம் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.