Homeஇலங்கையாழில் சிறுமியை நீண்டநாளாக பாலியல் துஷ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது!

யாழில் சிறுமியை நீண்டநாளாக பாலியல் துஷ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது!

Published on

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் நீண்ட நாட்களாக சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பலாலி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் நேற்றையதினம் (20.07.2023) வியாழக்கிழமை  கைது செய்யபட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறிய தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுமியின் தந்தை கடற்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

தந்தை இரவில் கடற்தொழிலுக்கு செல்லும் வேளையில் சிறுமியின் வீட்டுக்குச் செல்லும் சிறிய தந்தை சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறித்த பகுதியில் பிரதேச செயலக அதிகாரிகளால் சிறுவர் பெண்கள் பிரிவு விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் குறித்த சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான சிறிய தந்தை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

19 அடி உயர அம்பேத்கர் சிலை:அமெரிக்காவில் அக்டோபர் 14ம் திகதி திறப்பு

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயு விலை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு...

More like this

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

19 அடி உயர அம்பேத்கர் சிலை:அமெரிக்காவில் அக்டோபர் 14ம் திகதி திறப்பு

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு...