Homeஇந்தியாமோடி அரசு அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்

மோடி அரசு அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்

Published on

மோடி ஆட்சியின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளையும், வரலாறு காணாத விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வழங்கிட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ரயில் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

தென்சென்னை மாவட்டக்குழு சார்பில், இன்று காலை 10.30 மணிக்கு கிண்டி ரயில் நிலையத்தில் நடைபெறும் மறியலில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் உள்ளிட்டு ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்கின்றனர்.

வடசென்னை மாவட்டக்குழு சார்பில், இன்று காலை 10.30 மணிக்கு மூலக்கடை, யூகோ வங்கி முன்பு நடைபெறும் மறியலில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எல். சுந்தரராஜன் மற்றும் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு 10.30 மணிக்கு நடைபெறும் மறியலில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி பங்கேற்கிறார். மத்திய சென்னை சார்பில் இன்று காலை 10.30 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியலில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாவட்ட செயலாளர் ஜி. செல்வா உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்கின்றனர்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...