Homeஇலங்கைமொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் இராணுவ வீரர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் இராணுவ வீரர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

Published on

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ வீரர் ஒருவர் நேற்று (23) தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.

சிப்பாய் காணாமல் போனதை அறிந்த அதிகாரிகள் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் இருந்து அம்பங்கக பகுதிக்கு தண்ணீர் செல்லும் வான்கதவை மூடிவிட்டு நீர்த்தேக்கத்தை சோதனையிட்டுள்ளனர்.

அணையின் பிரதான சுவரில் இருந்து சுமார் 300 மீட்டர் கீழே உள்ள நீர்வழிப்பாதையில் உள்ள பாலத்தில் சிக்கிக்கொண்ட நிலையில் நள்ளிரவில் அவரது உடல் மீட்கப்பட்டது.

உயிரிழந்த சிப்பாய் இலங்கை 4 ஆவது காலாட்படை படைப்பிரிவின் தம்புலு ஓயா முகாமில் கடமையாற்றும் மற்றும் மொரகஹகந்த அணைக்கட்டு மற்றும் மின் உற்பத்தி நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கிய கோப்ரல் P.H.N சம்பத் (வயது 39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் எல்பிட்டிய, தாடிவில்லா, ரெண்டாவத்தையில் வசிப்பவர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...