Homeஇந்தியாமீண்டும் பரவி வரும் நிபா வைரஸ்

மீண்டும் பரவி வரும் நிபா வைரஸ்

Published on

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் என்ற கொடிய நோய் பரவி வருகிறது. நேற்றைய தினம் (15.09.2023) ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிபா வைரசினால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. அவர்களில் 2 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர். இதனால், கேரள மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய அளவில் உயரிய மருத்துவ அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் ராஜீவ் பாஹல் நிருபர்களுக்கு கருத்துதெரிவித்தார்.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட ஒரு நபருடன் தொடர்பு வைத்திருந்தமையால் ஏனையோருக்கும் நிபா வைரஸ் பரவி உள்ளது. நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு விகிதம் மிகவும் அதிகம்.

கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை மட்டுமே இருந்தது. ஆனால், நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் ஆகும்.

நிபா வைரஸ் தாக்கியவர்களுக்கு ‘மோனோகுளோனல் ஆன்டிபாடி’ என்ற மருந்து அளிக்கப்படுகிறது. நிபா வைரசினால் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட 14 பேர் இம்மருந்தின் மூலம் அனைவரும் உயிர் பிழைத்து விட்டனர்.

கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் தாக்கியபோது, அவுஸ்திரேலியாவில் இருந்து ‘மோனோகுளோனல் ஆன்டிபாடி’ மருந்தை கொள்முதல் செய்திருந்தோம். தற்போது, அந்த மருந்து 10 நோயாளிகளுக்கு மட்டுமே போதுமான அளவுக்கு இருக்கிறது.

இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், அவுஸ்த்திரேலியாவில் இருந்து மேலும் 20 டோஸ் மருந்து கொள்முதல் செய்யப்போகிறோம். இதை தொற்றின் ஆரம்பகட்டத்தில் அளிக்க வேண்டும். கருணை அடிப்படையில் இம்மருந்தை கொடுக்கலாம்.

மருந்தை பயன்படுத்துவது பற்றி கேரள அரசும், நோயாளிகளின் குடும்பத்தினரும்தான் முடிவு செய்ய வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் பரவலுக்கான காரணம் தெரியவில்லை.

2018-ம் ஆண்டு அங்கு பரவியதற்கு வௌவால்கள் காரணம் என்று கண்டுபிடித்தோம். வெளவாலிடம் இருந்து மனிதர்களுக்கு எப்படி பரவியது என்று தெரியவில்லை. இந்த தடவையும் காரணம் கண்டுபிடிக்க முயன்று வருகிறோம். மழை பருவத்தில்தான் இந்நோய் பரவுகிறது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...