மிஹிந்தலை, தொரமடலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து நேற்று பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் தனது தாயுடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும், தாய் அண்மைய வீட்டிற்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில், அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தொரமடலாவ பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.47 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.