Homeஇலங்கைமர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

Published on

புத்தளம் – நுரைச்சோலை, சேத்தபொல களப்பிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் சேத்தபொல களப்பிற்கு அருகில் நேற்றைய தினம்(26.08.2023) இனந்தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, ​​நெற்றி மற்றும் இடது கையில் வெட்டுக்காயங்களுடன் இறந்த பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டனர்.

குறித்த பெண்ணின் சடலத்திற்கு அருகில் பை ஒன்றில் காணப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அந்த இலக்கம் உயிரிழந்தவரின் மகளுடையது என தெரியவந்துள்ளது.

தொடர்ந்து மகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது இறந்துள்ள சடலம் தனது தாயுடையது என அடையாளம் காட்டியதனைத் தொடர்ந்து சடலம் தொடர்பில் உறுதிப்பூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நரக்கலிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த (25.08.2023) ஆம் திகதி இரவு ராகம தெவத்த தேவாலயத்திற்கு முச்சக்கர வண்டியில் மேலும் சிலருடன் செல்வதாகக் கூறிவிட்டு உயிரிழந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றிரவு மகள் தாயாரை அழைத்தபோது, ​​தாய் பதிலளித்ததாகவும் மகள் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...