மத்திய மாகாணத்தில் உள்ள நோயாளர் காவு வண்டி (ஆம்புலன்ஸ் ) சாரதிகள் இன்று (19) மற்றும் நாளை (20) ஆகிய இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண ஆம்புலன்ஸ் மற்றும் போக்குவரத்து சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் சம்பத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.