Homeஇலங்கைமட்டக்களப்பில் வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

மட்டக்களப்பில் வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

Published on

மட்டக்களப்பு – இருதயபுரம் பிரதேசத்தில் 4 வீடுகளை உடைத்து பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டள்ளனர்.

மேலும், திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரி ஜீ.எம்.பி.ஆர். பண்டார தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளின் கதவுகள் இரவு வேளையில் உடைக்கப்பட்டு அங்கிருந்து தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைபேசிகள் பணம் ஆகியவை திருட்டு போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜநாயக்கா தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 21 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரி மேலும், தெரிவித்தார்.

Latest articles

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

19 அடி உயர அம்பேத்கர் சிலை:அமெரிக்காவில் அக்டோபர் 14ம் திகதி திறப்பு

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு...

More like this

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...