Homeஇலங்கைமகளிர் பாடசாலைக்கு முன்பாக கஞ்சா விற்பனை செய்த நபரொருவர் கைது!

மகளிர் பாடசாலைக்கு முன்பாக கஞ்சா விற்பனை செய்த நபரொருவர் கைது!

Published on

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி நகரிலுள்ள பிரபல பெண் பாடசாலைக்கு முன்பாக கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்த நபரொருவர்.  பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் இன்று(27) காலை கைது செய்யப்பட்டார்.

இந்தத் தகவலை, காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாமுதீன் உறுதிப்படுத்தினார்.கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து கஞ்சா விற்கும் நபரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்ற போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி குறித்த நபரிடம் ‘கஞ்சா வேணும்’ எனக் கேட்டுள்ளார்.

மறுமுனையில் பதிலளித்தவர், குறித்த பாடசாலைக்கு முன்பாக வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சென்ற போதை ஒழிப்பு  பிரிவு பொறுப்பதிகாரி சியாமுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கொண்டு கேரளா கஞ்சாவை வாங்கிய போதே, விற்றவர் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரிடமிருந்து சிறிய பக்கட்டுகளைக் கொண்ட கேரளா கஞ்சா பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...