Homeஉலகம்போப் பிரான்சிஸை சந்திக்கவுள்ள Fumio Kishida!

போப் பிரான்சிஸை சந்திக்கவுள்ள Fumio Kishida!

Published on

தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ஜப்பானிய பிரதமர் Fumio Kishida, போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நாளை (புதன்கிழமை) வத்திக்கானில் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, ஜப்பானில் இருந்து வெளியாகும் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த 2014ஆம் ஆண்டு வத்திகானுக்கு பயணம் மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து தற்போது, 8 ஆண்டுகளுக்கு பின்பு முதன்முறையாக வத்திகானுக்கு ஜப்பான் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைந்துள்ளது.

இந்த சந்திப்பில், அணு ஆயுதங்களற்ற உலகிற்கான ஆதரவை போப் பிரான்சிஸிடம் ஜப்பானிய பிரதமர் கிஷிடா கோருவார் என கூறப்படுகிறது.

ஜப்பானிய பிரதமர் Fumio Kishida தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த பயணத்தில் இந்தோனேசியா, வியட்னாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) இத்தாலி செல்லும் அவர், அதன்பின்பு பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

யுக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது மற்றும் ஆற்றல் துறையில் வளர்ந்து வரும் சீனா ஆகியவற்றை முன்னிட்டு நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்காக கிஷிடாவின் இந்த பயணம் அமைந்துள்ளது.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...