செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்போப் பிரான்சிஸை சந்திக்கவுள்ள Fumio Kishida!

போப் பிரான்சிஸை சந்திக்கவுள்ள Fumio Kishida!

Published on

spot_img
spot_img

தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ஜப்பானிய பிரதமர் Fumio Kishida, போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நாளை (புதன்கிழமை) வத்திக்கானில் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, ஜப்பானில் இருந்து வெளியாகும் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த 2014ஆம் ஆண்டு வத்திகானுக்கு பயணம் மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து தற்போது, 8 ஆண்டுகளுக்கு பின்பு முதன்முறையாக வத்திகானுக்கு ஜப்பான் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைந்துள்ளது.

இந்த சந்திப்பில், அணு ஆயுதங்களற்ற உலகிற்கான ஆதரவை போப் பிரான்சிஸிடம் ஜப்பானிய பிரதமர் கிஷிடா கோருவார் என கூறப்படுகிறது.

ஜப்பானிய பிரதமர் Fumio Kishida தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த பயணத்தில் இந்தோனேசியா, வியட்னாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) இத்தாலி செல்லும் அவர், அதன்பின்பு பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

யுக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது மற்றும் ஆற்றல் துறையில் வளர்ந்து வரும் சீனா ஆகியவற்றை முன்னிட்டு நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்காக கிஷிடாவின் இந்த பயணம் அமைந்துள்ளது.

Latest articles

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம்- சிண்டிகேட் சர்வேஸ் கருத்துக்கணிப்பாளர் கூறுகிறார்

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம் என்று இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது...

தலைவர் 171 படத்திற்காக தெரிவுசெய்திருக்கும் 5 மாஸ் வில்லன்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் முடித்த கையோடு, சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 படத்தின் வேலைகளை ஆரம்பித்து...

நாடளாவிய ரீதியில் முதல் இடம்பிடித்த யாழ் வேம்படி மகளிர் கல்லூரி!

இன்று வெளியான 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ்...

இந்திய அணிக்காக 22 வயதில் இந்தியா அணிக்காக ஆடப் போகும் தமிழக வீரர்.

சென்னை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். 22 வயதில் சாய்...

More like this

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம்- சிண்டிகேட் சர்வேஸ் கருத்துக்கணிப்பாளர் கூறுகிறார்

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம் என்று இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது...

தலைவர் 171 படத்திற்காக தெரிவுசெய்திருக்கும் 5 மாஸ் வில்லன்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் முடித்த கையோடு, சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 படத்தின் வேலைகளை ஆரம்பித்து...

நாடளாவிய ரீதியில் முதல் இடம்பிடித்த யாழ் வேம்படி மகளிர் கல்லூரி!

இன்று வெளியான 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ்...