Homeஇலங்கைபெண்களை அச்சுறுத்தி கொள்ளையடிக்கும் கும்பல்

பெண்களை அச்சுறுத்தி கொள்ளையடிக்கும் கும்பல்

Published on

புத்தளத்தில் பெண்களை அச்சுறுத்தி கொள்ளையடிக்கும் கும்பலை தேடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனாத்தவில்லு பிரதேசத்தில் பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையிட்ட கும்பலை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த 30ஆம் திகதி வனாத்தவில்லு – 06 ஆம் மைல்கல் பிரதேசத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வனாத்தவில்லு – ஸ்மைல்புரம், மாரசிங்க பெடிகே பகுதியைச் சேர்ந்த சுஜீவ தீபானி செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தான் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகவும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தனது மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி, கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் காட்டி மிரட்டி தங்க சங்கிலி மற்றும் பதக்கத்தை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் யாரென அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர்களுடன் தொடர்புடைய மேலும் பலர் இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest articles

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

19 அடி உயர அம்பேத்கர் சிலை:அமெரிக்காவில் அக்டோபர் 14ம் திகதி திறப்பு

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு...

More like this

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...