இலங்கையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 2519 புதிய தாதியர்களுக்கு நாளைய தினம் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
2020ஆம் ஆண்டு பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 2519 மாணவர் தாதியர்கள் இங்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் 42000 க்கும் அதிகமான தாதியர்கள் பணிபுரிகின்றனர். குறித்த ஆட்சேர்ப்பின் மூலம் நாட்டில் தாதியர்களின் எண்ணிக்கை 45000ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.