Homeஉலகம்பிரித்தானியாவில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம். மீறினால் 7 ஆண்டுகள் சிறை

பிரித்தானியாவில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம். மீறினால் 7 ஆண்டுகள் சிறை

Published on

பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதியில் திருமணத்திற்கான சட்டபூர்வ வயதில் இன்று முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி16 அல்லது 17 வயதுடையோர் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதுடன், குறித்த வயதுடையோர் தனியாக வாழ்க்கை நடத்துவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது பெற்றோரின் சம்மதத்துடன் நடந்தாலும், அது சட்டத்திற்கு புறம்பானதாகும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா மற்றும் வேல்ஸில் இன்று முதல் திருமண வயதை 18 என உயர்த்தியுள்ளனர். இதனால் அப்பாவி சிறார்கள் திருமண பந்தத்தில் வலுக்கட்டாயமாக சிக்க வைப்பது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருமண வயதில் மாறுதல் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள நிலையில், இதில் எவரேனும் தவறிழைத்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

இந்த புதிய சட்டத்திருத்தம் தொடர்பில் தொண்டு நிறுவனம் ஒன்று கருத்து தெரிவிக்கையில், குழந்தை திருமணம் தொடர்பான சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது அதில் இருந்து தப்பித்தவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.மேலும், சிறார் திருமணங்களை ஊக்குவிக்கும் குடும்ப வழக்கத்திற்கு இது மாபெரும் பின்னடைவு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் பிரித்தானியாவில் 64 சிறார் திருமணங்களை உரிய முறையில் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது போன்ற சட்டத்திருத்தம், அடையாளம் காணப்படுவதுடன் புகார் அளிக்கவும், இதனூடாக அப்பாவி பெண் பிள்ளைகள் திருமண பந்தத்தில் சிக்காமல் இருக்கவும் உதவும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

2021ல் மட்டும் 118 சிறார் திருமணங்களை அரசு சார்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தியுள்ளதுடன், தொடர்புடைய குடும்பங்கலுக்கு ஆலோசனைகளும் ஆதரவும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...