செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபிரதமர் பதவி தொடர்பிலான சஜித்தின் கருத்து!

பிரதமர் பதவி தொடர்பிலான சஜித்தின் கருத்து!

Published on

spot_img
spot_img

இடைக்கால அரசாங்கத்தில் பங்குகொள்ளும்படி யாரேனும் என்னை கட்டாயப்படுத்த முயற்சித்தால், அவர்களின் பெயர்களை வெளிப்படுத்திவிட்டு வீட்டுக்குச் செல்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “நாங்கள் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவும் பொது நிதியை கொள்ளையடித்தவர்களுடன் தொடர்புகொள்ளவும் விரும்பவில்லை. மக்கள் ஆணையுடன் ஆட்சி அமைக்க மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்.

எனக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன். அரசியலமைப்பு நெருக்கடியின்போது இது நடந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

மாற்று அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மாற்றப்படுவார் என்றும் சிலர் கூறுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழப்பதில் எனக்கு கவலையில்லை. யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் ‘ஹஸ்மா’ போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களைத் தொடங்குவதில் சிரமம் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகத்துடனான இராஜதந்திர உறவுகளை புதுப்பித்து அதற்கான உதவியைப் பெறும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest articles

தெற்காசியாவின் முதல் உயரமான சுழலும் உணவகம் கொழும்பில்…

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம்...

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின்...

இன்றைய ராசி பலன்கள்

சோபகிருது ஆண்டு – கார்த்திகை 21 - வியாழக்கிழமை (07.12.2023) நட்சத்திரம் : அஸ்தம் நாள் முழுவதும் திதி : தசமி...

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

More like this

தெற்காசியாவின் முதல் உயரமான சுழலும் உணவகம் கொழும்பில்…

கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம்...

மின் பாவனையாளர்களுக்கு சிவப்புக் கட்டணப் பட்டியல் : மின்சாரசபை விசேட அறிவிப்பு!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின்...

இன்றைய ராசி பலன்கள்

சோபகிருது ஆண்டு – கார்த்திகை 21 - வியாழக்கிழமை (07.12.2023) நட்சத்திரம் : அஸ்தம் நாள் முழுவதும் திதி : தசமி...