Homeஇலங்கைபல கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த சந்தேகநபர் கைது!

பல கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த சந்தேகநபர் கைது!

Published on

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர் பல கடவுச்சீட்டுக்களை நபர்களிடம் பெற்று வருவதாக பொலிஸ் விசேட பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இதற்கமைய சம்பவ இடத்திற்கு நேற்று (23) கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து சுற்றி வளைத்து தேடுதல் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பகுதியை சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க மைக்கல் மணிமேகலன் என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் என கூறி சிலரிடம் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டுக்களுடன் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வங்கி கணக்கின் ஊடாக பலரிடம் பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.மேலும் சந்தேக நபர் வசம் இருந்த கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இவ்வாறு வரவழைக்கப்பட்டவர்கள் அனைவரும் நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் தமது கடவுச்சீட்டுக்களை சந்தேக நபரிடம் மத்திய கிழக்கு வேலைவாய்ப்பிற்காக வழங்கியதாகவும் அதற்காக சந்தேக நபரின் வங்கி கணக்கிற்கு பெருந்தொகையான பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையின் அடிப்படையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் பொலிஸ் குழுவினர் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்களை பெற்றுள்ளதுடன் கைதான சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்புகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரா அல்லது இடை தரகரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...