Homeஇலங்கைபல்கலைக்கழக புதிய கல்வியாண்டில் இரு புதிய பாடநெறிகள் அறிமுகம்

பல்கலைக்கழக புதிய கல்வியாண்டில் இரு புதிய பாடநெறிகள் அறிமுகம்

Published on

புதிய கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் பல பாடநெறிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தரவுசார் பட்டப்படிப்பு பாடநெறி சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் ஆரம்பிக்கப்படும். இதற்காக 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.ஆரம்பநிலை கல்வி தொடர்பான பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதற்காக 75 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

கொழும்பு மருத்துவ பீடத்தில் வைத்திய தொழில்நுட்பம் தொடர்பான புதிய பாடநெறி ஆரம்பிக்கப்படும். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைககழகத்தில் புதிதாக மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்படும். இதற்காக 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

புதிய கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் இரண்டு புதிய பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

புதிதாக 20 கற்கை பிரிவுகள் ஆரம்பிக்கப்படும். புதிய கல்வியாண்டில் மருத்துவ பீடங்களுக்கு 615 மாணவர்கள் மேலதிகமாகவும் பொறியியல் பீடங்களுக்கு 480 மேலதிக மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது 12 மருத்துவ பீடங்களும் ஆறு பொறியில் பீடங்களும் உள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...