Homeஇலங்கைநிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகள் குழு கைது!

நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகள் குழு கைது!

Published on

இணையம் மூலம் உலகெங்கிலும் உள்ள பலரது வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடியதாகக் கூறப்படும் சீனப் பிரஜைகள் குழுவொன்றை இலங்கை பொலிஸார் சனிக்கிழமை அளுத்கமவில் கைது செய்துள்ளனர்.

அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்து இணையம் ஊடாக பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் கணக்குகளில் இருந்து இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த 39 சீன பிரஜைகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தூதரகங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நேற்று (1) பல பொலிஸ் குழுக்கள் சீனர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சுற்றிவளைப்பின் பின்னர் அவர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பெண்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட 39 சீன பிரஜைகளும் அளுத்கம பொலிஸாருக்கு தனியார் பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டதுடன், பொலிசார் கணினிகள் மற்றும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஏராளமான பணத்தை ஆதாரமாக கைப்பற்றினர்.

அவர்கள் சீனாவில் இருந்த போது இந்த மோசடியை மேற்கொண்டு இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...