நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய 4 மாவட்டங்களுக்கே குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தின், சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை – தர்மபுரம் பொதுச்சந்தை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.