செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதைத்திருநாளில் மாற்றம் தரும் மகிழ் வாழ்வு மலரட்டும் ; அமைச்சர் டக்ளஸின் தைப்பொங்கல் வாழ்த்து.

தைத்திருநாளில் மாற்றம் தரும் மகிழ் வாழ்வு மலரட்டும் ; அமைச்சர் டக்ளஸின் தைப்பொங்கல் வாழ்த்து.

Published on

spot_img
spot_img

தைப்பொங்கல் திருநாளில் விரைவில் சகல மக்களின் வாழ்விலும் மாற்றம் தரும் நீடித்த மகிழ் வாழ்வு மலரட்டும் என ஈழ மக்கள் ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“தைப்பொங்கல் திருநாள் நாம் நேசிக்கும் தொன்று தொட்ட தமிழர் பண்பாட்டு பெருநாள். உழுதுண்டு வாழும் உழவர் மக்கள் காலந்தோறும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நன்னாள்.

தமது வாழ்வுயர வழிவகுத்த சூரியனுக்கு நன்றி செலுத்துவது போல், தமது வாழ்வெங்கும் மலர்ந்தும் மறையாத மாசற்ற ஒளிச்சுடராக நின்று, இருள் சூழ்ந்த இடர் பூமியில் இருந்து நடை முறை சாத்தியமான பாதையில் தம்மை விடிவை நோக்கி அழைத்து செல்பவர்களுக்கும் தமிழ் மக்கள் முழுமையான நன்றியை செலுத்த முன்வரவேண்டும்.

அரசியல் அதிகாரங்களை மக்கள் நலன் சார்ந்து சரிவரப் பயன்படுத்துவதற்கும் முன்னோக்கி செல்வதற்கும் வல்லமை உள்ளவர்களுக்கு வலிமை சேர்ப்பதே நாமார்க்கும் அடிமையல்லோம் யமனை அஞ்சோம், நரகத்தில் இடர்படோம் என நிமிர்ந்தெழும் காலத்திற்கு வழி சமைக்கும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற எமது மக்களின் நம்பிக்கைகள் நிறைவேறி வருகின்றன.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என தொடங்கும் புதுவாழ்வு நோக்கி பயணிக்கும் மதிநுட்ப சிந்தனையே இன்று வெற்றி பெற்று வருகிறது. நீண்ட காலமாக நாம் வலியுறுத்தி வருவதையே வரலாறு இன்று மீண்டும் ஏற்றுக்கொண்டு வருகின்றது.

வறுமையற்ற வாழ்வு மலர வேண்டும், உழைக்கும் மக்களின் வாழ்வுயர வேண்டும். வீடற்ற மக்களுக்கு வீடுகளும், நிலமற்ற மக்களுக்கு காணி நிலங்களும் வேண்டும். உறவுகளை இழந்து தவிக்கும் எமது மக்களின் கண்ணீருக்கு பரிகாரம் வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ நீதி எங்கும் ஓங்க வேண்டும். இவைகளை நோக்கி பயணிப்போம்.

இன்றே விழித்திருப்போம்,.. நல்லதே நடக்கும் நாளை என்ற நம்பிக்கையோடு தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம்” இவ்வாறு வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest articles

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

ஜோனாதனின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதனை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ்...

More like this

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட...

வெளி மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக் கல்லூரி

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு...

யாழ் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம்...