திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதம் ஹபரணை ஹதரஸ் கொடுவ பகுதியில் இரண்டு காட்டு யானைகளுடன் மோதியதில் தடம் புரண்டுள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு யானைகளும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹுருலு சுற்றுச்சூழல் பூங்காவில் இருந்து வந்த காட்டு யானைகள் ரயிலில் மோதியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் தடம் புரண்ட போதிலும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.