Homeஇந்தியாதாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Published on

தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய தீயணைப்பு வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தாம்பரம் தீயணைப்பு நிலையம் 1975ம் ஆண்டு துவங்கப்பட்டு தாம்பரம், சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 184 தீ விபத்துகளை மேற்கொண்டு மனித உயிர்களையும், உடைமைகளையும் திறம்பட காத்து, 655 உயிர் மீட்பு அழைப்புகளை மேற்கொண்டு, 20 மனித உயிர்களை காப்பாற்றியதுடன், 467 விலங்குகளையும் காப்பாற்றி சிறப்புடன் செயல்பட்டுள்ளது.

தாம்பரம் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. எனவே, ஏற்கனவே தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் உள்ள 3 தீயணைப்பு வாகனங்கள் பெரும் விபத்துக்கள் ஏற்படும்போது, பணியில் ஈடுபடுத்த போதுமானதாக இல்லை என்பதால், கூடுதல் வாகனம் வேண்டும் என தீயணைப்பு துறை அதிகாரிகள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று தாம்பரம் தீயணைப்பு நிலையம் மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு நிலையமாக மாற்றப்பட்டு, நிலையத்திற்கு புதிய தீயணைப்பு வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்சென்னை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோ, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...