Homeஇலங்கைதாதியர் பயிற்சிக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பம் கோரல்!

தாதியர் பயிற்சிக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பம் கோரல்!

Published on

தாதியர் பயிற்சிக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சி கற்கை நெறிக்கு ஆட்சேர்ப்பதற்கு இணையத்தள வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்காக 2019, 2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என்றும் ஒரு விண்ணப்பதாரியினால் ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், வர்த்தமானி அறிவித்தல் மற்றும் இணையத்தளம் வழியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசிக்க வேண்டும் என்பதுடன் விண்ணப்பங்களை சுகாதார அமைச்சின் [email protected] எனும் இணையத்தளத்தினூடாக மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளம் ஊடாக மாணவர் தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க பின்வரும் இணையவழி இணைப்பை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. recruit.health.gov.lk/

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...