Homeஇந்தியாதமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

Published on

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விண்ணப்பித்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 175 மாணவர்களுக்கு பல சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 22ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு 3 கட்டங்களாக நடைபெறும். முதல் சுற்று பொது கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடத்தப்படுகிறது. 1,78,959 மாணவ, மாணவிகளுக்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். மொத்தத்தில் தமிழ்நாடு முழுவதும் 430 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

தரவரிசையில் 22 ஆயிரத்து 761 இடம் வரையுள்ள மாணவர்கள் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள். முதல் சுற்றில் மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் ஜூலை 30 மாலை 5 மணி வரை விருப்ப கல்லூரிகள் மற்றும் விருப்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். வரும் 31ம் தேதி காலை 10 மணிக்குள் மாணவர்களின் விருப்ப தேர்வு அடிப்படையில் அவர்களுக்கான தற்காலிக இடம் ஒதுக்கப்படும் என பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...